Wednesday, 18 January 2017

குடிபழக்கத்தில்இருந்து விடுதலை

குடிப்பழக்கத்திலிருந்து முழு விடுதலை பெற .....
**************************************
நடைமுறை சூத்திரம்
" கரிசாலை, சீரகம் சூரணம்"
தேவையானவை:
சீரகம் பொடியாக 200 கிராம்
கரிசலாங்கண்ணி சாறு 400 மில்லி
சுக்கு தூள் 100 கிராம்
நாட்டுசர்க்கரை 200 கிராம்
செய்முறை:
சீரகபொடியை பீங்கான்பாத்திரத்தில்
இட்டு அதில் மூழ்கும் அளவு கரிசாலை சாறுவிட்டு நன்கு ஊறி
காய்ந்தபின் இடித்து பொடியாக்கி
அதில் சுக்குபொடியை கலந்து
பின் நாட்டு சர்க்கரையை கலந்தால்
சூரணம் தாயார்.
இச்சூரணரத்தை காலை ,மாலை
ஆகாரத்திற்கு முன் வேளைக்கு ஒரு
டீஸ்பூன் வீதம் பாலுடன் கலந்து
இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடிக்கவேண்டும் என்கிற எண்ணம் வராது.
(சூரணம் தீர்ந்தால் புதிதாக தயாரித்துக்கொள்ளவும்.)
* குடித்து கெட்டுபோன கல்லீரல்,
மண்ணீரல் ஆரோக்கியம் பெறும்.
மேலும் கடைபிடிக்க வேண்டியவை:
* குடி நண்பர்கள் நட்பு தவிர்கவும்
* மதுக்கடை வழியாக போவதை தவிர்கவும்
* தியான பயிற்சி கற்று தினசரி செய்யவும்.
* பசியோடு இருக்ககூடாது.
* இரவு கண்விழிப்புகூடாது.
* ஓய்வு நேரத்தை குடும்பத்தினருடன்
கழிக்கவும்.
* ஓய்வு நேரத்தில் ஏதேனும் பொது
சேவையில் பங்குகொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் அனைத்தையும்
தவராமல் கடைபிடித்தால்
குடிநோயிலிருந்து முழு விடுதலை
பெறலாம்.

No comments:

Post a Comment