Monday, 6 March 2017

கண் பார்வை தெளிவாக

கண் பார்வை தெளிவாக
கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.
பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்
.

மூச்சுபிடிப்பு நீங்க மருந்தில்லா மருத்துவம் எளிய " கப்பிங் தெரபி ' காணொலி...



மூச்சுபிடிப்பு நீங்க
மருந்தில்லா மருத்துவம்...
************************************
எளிய " கப்பிங் தெரபி ' காணொலி...




Sunday, 5 March 2017

தொடர் விக்கல் நிற்க..

தொடர் விக்கல் நிற்க..
***************************
அரிசி திப்பிலி
சீரகம் 
இரண்டையும் தனித்தனியாக இலேசாக வருத்து பொடியாக்கி
சலித்து நைசாக வைத்துக்கொண்டு
அரிசி திப்பிலி பொடிஅரை டீஸ்பூன்
சீரகம் பொடி அரை டீஸ்பூன்
இவற்றை பால் அல்லது தேனுடன்
கலந்து சாப்பிட தொடர் விக்கல்
நிற்கும்.
Image may contain: food

பெண்களுக்கு மட்டும்..



பெண்களுக்கு மட்டும்..
********"*******************
மாதவிடாய் காலங்களில் நீடித்த போக்கு இருப்பின்
"அசோக அரிஸ்டம்" என்ற மருந்து
டானிக் போன்று இருக்கும் இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 30 மிலி உடன் 30 மிலி தண்ணீர் கலந்து அருந்திவர நாட்பட்ட மாத ஒழுக்கு கட்டுப்படும்.இதை அனைத்து மகளிரும் சாப்பிட்டுவர பல பிரச்சினைகள் தீரும்.
அந்த அதிகபடியான நாட்களில் இத்துடன் உள்ள காணொலியில் உள்ளபடி தினசரி ஒரு முறை மட்டும்
செய்துவர விரைவில் போக்கு நிற்கும்.


அடிபட்ட வீக்கம், முறிந்த எலும்பு கூட,

அடிபட்ட வீக்கம், முறிந்த எலும்பு கூட,
இரத்தக் கட்டு, ஜவ்வுகிழிதல் சீராக....
*****************************************
" ஊசிப்பாலை "
எளிதில் கிடைக்கக்கூடிய, வேலி, செடி,புதர் பகுதியில் படர்ந்திருக்கும்
கொடிஇனம் இது.
இதை ஊசிப்பாலை என்றும்கூறுவர்,
இதன் இலை,பூக்களை பறித்து நன்கு மைய அறைத்து ( தண்ணீர் விடாமல்) மேலே பற்றிட மேல் கூறிய பிரச்சினைகள் மிக எளிதில் தீரும்

தொடர் இருமல்,தொண்டை புகைச்சல் தீர...

தொடர் இருமல்,தொண்டை புகைச்சல் தீர...
**************************
அதிமதுரம் ஒரு பட்டாணி அளவு எடுத்துக்கொண்டு
ஒரு வெற்றிலையில் சிறிது தேன் தடவி 
அதில் மூன்று மிளகை வைத்து அந்த
அதிமதுர துண்டை வைத்து
வெற்றிலை போடுவதுபோல் வாயில்
அடக்கிவைத்துக்கொண்டு
உமிழ்நீரை விழுங்கிவரவேண்டும்.

Image may contain: 1 person, close-up
No automatic alt text available.

மூட்டுவலி தீர...

மூட்டுவலி தீர...
********************
பொதுவாக மூட்டுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன.
அதில் மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை ஒரு காரணமாக உள்ளது.
இதனைக் குணப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவ
முறையினில் ஏராளமாக உள்ளது.
மருந்துகள் :
1 -முடக்கத்தான் கீரை இலை -2 கைபிடி அளவு எடுத்து இதனுடன் பூண்டு -2 பல்,மிளகு ,சீரகம் சிறிது,தக்காளி
ஒன்று,தண்ணீர் -2-டம்ளர் சேர்த்து கொதிக்க வைத்து
சூப் செய்து சாப்பிடவும்.
இது போல் வாரம் மூன்று முறை சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள மூட்டு வலி எளிதில் குணமாகும்.
2 -வாயு சூரணம் :
சுக்கு -50 -கிராம்
மிளகு -50 -கிராம்
திப்பிலி -50 -கிராம்
சீரகம் -50 -கிராம்
ஏல அரிசி -25-கிராம்
இவைகளை லேசாக வறுத்து இடித்து பொடி செய்து
கொள்ளவும்.
இதில் காலை, மாலை -உணவிற்கு முன் கால் டீஸ்பூன் அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவும்.
உடலில் சகல வாயுப் பிரச்சனைகளும் தீரும்.பசி
நன்கு எடுக்கும்.மூட்டு வலி ,குதிக்கால் வலி தீரும்.
இதற்கு மேற் பிரயோகமாக முந்தய பதிவில் குறிப்பிட்ட
"வாத நாராயணன் தைலம்"செய்து தடவலாம்.
============================================================
வாத நாராயணன் -Delonix elata - வாத மடக்கி தைலம் செய்முறை
வாத நாராயணன் -Delonix elata
இதன் வேறு பெயர்கள் :-
வாதரக் காய்ச்சி, வாத மடக்கி, வாத நாசினி
இதன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அடை போல் சுட்டு
உண்ணலாம்.வாரம் 3-முறை பயன்படுத்தலாம். இதனால் வாத வலி,மூட்டு வீக்கம்,குத்தல்,குடைச்சல் தீரும்.
இதன் இலைச்சாறு 1-அவுன்ஸ் அளவு குடித்து வர இரண் டொரு முறை மலம் கழியும் வாத குடைச்சல்,வீக்கம்,வலி தீரும்.
நீரில் இதன் இலையை போட்டு கொதிக்க வைத்து குளிக்க உடல் வலி,அலுப்பு தீரும்.
வாத மடக்கி தைலம் செய்முறை :
1 - வாத மடக்கி இலைச்சாறு - 1-லிட்டர்
2 - நயம் விளக்கெண்ணை - 1-லிட்டர்
3 -சுக்கு - 40 - கிராம்
4 - மிளகு - 40 - கிராம்
5 - திப்பிலி - 40 - கிராம்
6 - வெண் கடுகு - 10-கிராம்
மேற் குறிப்பிட்ட 4-சரக்குகளை வாத மடக்கி இலைச்சாறு விட்டு அரைத்து எண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவு படுக்கும் போது 2-டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிடவும்.காலையில் மலம் ஓரிரு முறை கழியும்.
இதனால் தீரும் நோய்கள் :-
வாத ரோகம்,கீல்வாயு,குதிக்கால் வலி,முடக்கு வாதம், நடுக்கு வாதம்,நரம்புத் தளர்ச்சி,கை கால் குடைச்சல், நரித்தலை வாதம் முழங்கால் முட்டி வீக்கம் போன்ற அனைத்தும் தீரும்.
Image may contain: one or more people and people sitting